மக்கள் சீனத்தில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள், தங்கள் அரசியல் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சுயநிர்ணய உரிமை குறித்த விவாதத்திற்கு மாவோ பதிலளிக்கையில், ""இப்போதும்கூட சிலர் மார்க்சிய லெனினிய விளக்கங்கள் குறித்து, அரசியல் மாற்றம் அடைந்தவுடன், அனைத்து நோய்களையும் தீர்க்கத் தக்க, தயாரான நிலையில் உள்ள "சர்வரோக நிவாரணி' என்று புரிந்து கொண்டுள்ளனர். இது போன்று அறியாமையில் உள்ளவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல் வாதிடுபவர்களின் கருத்து குழந்தைத்தனமானது என்பதைப் புரிய வைக்க வேண்டும். மிகச் சரியாகக் குறிப்பிடுவது என்றால் - அந்த அறியாமையில் உள்ளவர்கள் மார்க்சியம் லெனினியம் என்பது மதக் கோட்பாடு போன்றது எனப் புரிந்து வைத்துள்ளனர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர், தங்களின் கருத்தியல் ஏற்றுக்கொள்ள முடியாதவை கோட்பாடுகள் அல்ல, மாறாக செயலுக்கான வழிகாட்டி எனத் திரும்பத் திரும்பக் கூறினர். ஆனால், சிலர் இந்த அதிமுக்கியமான, மிகப்பெரிய விளக்கத்தை மறுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து விடுகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். (மா சே துங் 1942 - கட்சி வேலைகளின் பாணியை நெறிப்படுத்த)