மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா?

திருச்சி கிழக்கு தொகுதி குறித்து...

News image

விஜய், த்ரிஷா

Updated On :4 மே 2026, 1:33 pm IST

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கில் நடிகை த்ரிஷா போட்டியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1.20 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இதில், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 1.30 மணி நிலவரப்படி (6வது சுற்று) 40,339 வாக்குகள் பெற்று 16,574 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சேகர் 20,908 வாக்குகள் பெற்றுள்ளார்.

மேலும், திருச்சி கிழக்கில் 29884 வாக்குகள் பெற்று, 12173 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு தொகுதியில் வென்றால் ஏதாவது ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

இந்த நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் ராஜிநாமா செய்வார் என்றும் அத்தொகுதியில் மீண்டும் நடைபெறும் இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reports suggest that actress Trisha may contest in Trichy East, where Tvk leader Vijay contested.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.