இயக்குநர் சசி நூறு சாமி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் சசி இயக்கிய நூறு சாமி திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிச்சைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியும் சசியும் இணைந்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இப்படம் தாயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பிச்சைக்காரன் எந்த அளவிற்குப் பேசப்பட்டதோ அதே அளவு பேசப்படலாம் என்றும் தெரிகிறது.
முக்கியமாக, இப்படத்தைப் பார்த்த இயக்குநர் சுப்ரமணியன் சிவா, ‘நூறு சாமி திரைப்படத்துக்குக் குறைந்தது 4 தேசிய விருதுகளாவது கிடைக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, “ஒரு மகன் தன் அம்மாவைச் சாமியாக பார்த்தால் அது பிச்சைக்காரன். ஒரு மகன் தன் அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் அது நூறு சாமி. பெற்ற தாயைக் கடவுளாக ஆராதித்துக் கொண்டாடுகிறோம். அப்படியான தாயை மனுஷியாகவும் பாருங்கள் என்பதையே நூறு சாமி கூறுகிறது. இக்கதையைக் கேட்டதுமே விஜய் ஆண்டனிக்கு பிடித்துவிட்டது. கதைக்காக தன்னை இதில் இணைத்துக்கொண்டார். நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்துள்ளார். பேரன்போடும் பெரும் துணிவோடும் ஒரு அம்மாவைத் திரையில் கட்டமைக்க முயற்சி செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
director sari spokes about his new movie nooru samy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!
நூறு சாமி டீசர்!

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!
குறைந்தது 4 தேசிய விருதுகள்! நூறு சாமி படத்தைப் பாராட்டிய இயக்குநர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

