செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து..

News image

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்! - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :15 ஜூன் 2026, 1:37 pm IST

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பின்போது, அதில் நடித்த நடிகர்கள் கண்கலங்கி அழுத விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 850 நாள்களைக் கடந்துள்ளது.

இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களின் இணைக்கு சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

கடைசிநாள் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடரில் இருந்து விலகிய கமருதீனும் நிறைவு நாள் காட்சியில் நடித்தார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அனைவரும் மகாநதி தொடரில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பலரும் கண்கலங்கி அழுத விடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

பலதரப்பட்ட ரசிகர்கள் கொண்ட இந்தத் தொடரின், இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Summary

A video showing the actors of the Mahanadhi series tearing up and crying during the final day of filming has gone viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.