வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அட்டாரி - வாகா எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான்..! முதல்முறையாகப் பங்கேற்கும் இசையமைப்பாளர்!

அட்டாரி - வாகா எல்லையில் பாடல் பாடும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து...

News image

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். - படம்: எக்ஸ் / ஏ.ஆர். ரஹ்மான்.

Updated On :7 ஜூன் 2026, 1:51 pm IST

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று (ஜூன் 7) மாலை 4.30 முதல் 5.30 மணி வரையில் அட்டாரி - வாகா எல்லையில் பாடல் பாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப், ஜேசிபி திடலில் ‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபுட் டூ பிரேவ்ஹார்ட்ஸ்’ என்ற தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா (Main Vaapas Aaunga) என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தில்ஜித் தோசஜ், நஸ்ரூதின் ஷா, ஷர்வாரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவினை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. படத்தின் புரமோஷன் அல்லாமல், ராணுவ வீரர்களை சிறப்பிக்கும்படியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இம்தியாஸ் அலி, மோஹித் சௌஹான், பூஜா திவாரி உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் இம்தியாஸ் அலி “முதல்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபுக்கு வருகிறார். இதுவரை எந்த இசைக் கலைஞர்களும் அட்டாரி - வாகா எல்லையில் பாடல் பாடியதில்லை. கொடி நிகழ்வின்போது ஏ.ஆர். ரஹ்மான் பாடல் பாடுவார். இந்தப் படத்துக்கும் இந்த இடத்துக்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடுவது மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும் என்றார்.

Summary

AR Rahman to perform at Attari Border to honour BSF bravehearts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.