ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் கசிவிலிருந்து மீண்டு வரவில்லை: எடிட்டர் பிரதீப் ராகவ்

ஜன நாயகன திரைப்படம் குறித்து அப்படத்தின் எடிட்டர் பேசியுள்ளார்...

Jananayagan Trailer Scene.

ஜன நாயகன் டிரைலர் காட்சி. - படம்: யூடியூப் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Published On :30 ஜூலை 2026, 12:53 pm IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் குறித்து அதன் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் பேசியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன.

இப்படம் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகளில் இந்த வார இறுதிவரை திரையிடப்படும் என்பதால் கூடுதல் வசூலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இப்படத்தின் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் , “ஜன நாயகன் இணையத்தில் கசிந்த சம்பவத்திலிருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை. போர் எறும்புகளாக இருந்தாலும் அவை ஒரு விலங்கையே கொல்லக்கூடியவை. இந்த சம்பவத்தை இப்படித்தான் பார்க்கிறேன். இணையத்தில் கசிய விட்டவர்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அதேநேரம், இப்படத்தைப் பார்த்த பலரை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. அவர்களுடையதாக இருந்தால் அதனைச் செய்திருக்க மாட்டார்கள். பணத்தைவிட 1000 பேரின் உழைப்பு அதில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்,

ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பும் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Editor Pradeep E. Raghav has spoken about the film Jana nayagan, starring Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.