ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

பிரபல சின்ன திரை நடிகர் ஜெயமணி காலமானார்.

jayamani

நடிகர் ஜெயமணி - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

Published On :29 ஜூலை 2026, 1:08 pm IST

பிரபல திரைப்பட மற்றும் சின்ன திரை குணச்சித்திர நடிகர் வி.சி. ஜெயமணி மாரடைப்பு காரணமாக காலமானார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின்மீது இருந்த ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெயமணி, திரைப்படம் மற்றும் தொடர்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இவர், திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் பாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். மெட்டிஒலி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததோடு இல்லாமல், 40-க்கும் மேற்பட்ட தொடர்களையும் இயக்கியும் உள்ளார்.

முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிறகடிக்க ஆசை தொடரில் 'மலேசியா மாமா' வேடத்தில் இயல்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நடிகர் வி.சி. ஜெயமணியின் மறைவுக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Popular film and television character actor V.C. Jayamani passed away due to a heart attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.