ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி வெற்றிக்கு வித்தியாசமாக வாழ்த்திய கமல்..! ஆதரவும் கேலியுமாக வைரலான பதிவு!

நடிகர் கமல் ஹாசன் பகிர்ந்த லத்தீன் மொழி புதிவு குறித்து...

Kamal Haasan

நடிகர் கமல் ஹாசன். - படம்: எக்ஸ் / கமல் ஹாசன்.

Published On :26 ஜூலை 2026, 4:39 pm IST

நடிகர் கமல் ஹாசன் பகிர்ந்த லத்தீன் மொழி புதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. சிலர் அவரது பதிவை கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் இறுதியில் கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ததும் போராட்டம் முடிவடைந்தது.

இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இந்தியா முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திரைப்பிரபலங்கள் பலரும் கடைசி கட்ட நேரத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கதக்கது.

நடிகரும் எம்பியுமான கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வெற்றி குறித்து, “வோக்ஸ் போபுளி (vox populi)” எனப் பதிவிட்டுள்ளார். இது லத்தீன் மொழியில் வரும் வார்த்தையாகும். இதற்கு ’மக்களின் குரல்’ என்று பொருள்.

பொதுவாகவே கமல் பேசுவது புரியாது, வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறும்நிலையில், இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தப் பதிவுக்கு சிலர் கமலின் புதுமைக்கு ஆதரவாகவும் சிலர் இதெல்லாம் வெறுமனே பகட்டு என கிண்டல் செய்தும் வருகிறார்கள். கமல் அடுத்ததாக கல்கி 2, கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படங்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Vox populi Kamal Haasan gets trolled for his Latin phrase of cjp victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.