ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் கௌரவங்களில் ஒன்று: ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல்

பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல் தெரிவித்தது தொடர்பாக...

trisha

ஜானகி மறைவுக்கு த்ரிஷா இரங்கல். - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :12 ஜூலை 2026, 9:04 am IST

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு நடிகை த்ரிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”என்னுடைய மிகவும் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் திகழும்.

ஆனால், உங்களை அறிந்துகொண்டதும், உங்கள் அன்பைப் பெற்றதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிகவும் அன்பான உள்ளம் கொண்டவர்கள்' என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி. உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அமைதியாக இளைப்பாறுங்கள் ஜானகி அம்மா, உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Actress Trisha has expressed her condolences over the passing of playback singer S. Janaki.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.