டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மை லார்ட் என்னை நிறைய யோசிக்க வைத்தது: மாரி செல்வராஜ்

மை லார்ட் குறித்து மாரி செல்வராஜ்....

News image
மாரி செல்வராஜ்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மாரி செல்வராஜ் மை லார்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சைத்ரா ஆச்சார் நடிப்பில் உருவான மை லார்ட் திரைப்படம் பிப். 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “மை லார்ட் திரைப்படத்தைப் பார்த்து முடித்ததும் என் உதவி இயக்குநர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். இப்படத்தின் முடிவு என்னை நிறைய யோசிக்க வைத்ததுடன் தர்க்கப்பூர்வமாக அசைத்துப் பார்த்தது. கிளைமேக்ஸ் சரியா? இல்லை, தவறா? என இரவு முழுவதும் பேசினோம். இப்படி நினைத்துப் பாருங்கள் என ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

நடிகர் சசிகுமாரால் மட்டும்தான் இப்படியான படங்களில் நடிக்க முடியும். நல்ல கதையை எழுதுபவர்களிடம் எல்லாம் சசிகுமார் இருக்கிறார். தைரியமாக எழுதுங்கள் என்றுதான் சொல்வேன். அப்படியான ஓர் ஆள். ராஜுமுருகன் இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.