ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்பதிவிலேயே ஆயிரம் கோடி வசூலித்த அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே!

அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே திரைப்படத்தின் முன்பதிவு குறித்து...

Published On :19 ஆகஸ்ட் 2026, 5:55 pm IST

அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே திரைப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே மிகப்பெரிய தொகையை வசூலித்துள்ளது.

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவான மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படம் “அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே”.

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான “டாக்டர் டூம்” கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் டிச. 18 ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் இந்திய மதிப்பில் ரூ. 950 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அசாதாரணமாக இவ்வளவு கோடிகளை ஈட்டியுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

The movie Avengers: Doomsday has grossed a massive amount from ticket pre-sales alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.