தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூ. 8 கோடி சம்பளம் கேட்கும் சாய் அபயங்கர்?

சம்பளத்தை உயர்த்திய சாய் அபயங்கர்...

News image

சாய் அபயங்கர்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:45 am

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் மே வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

மேலும், தற்போது இயக்குநர் அட்லியின் ராக்கா, தனுஷின் டி55 இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சாய் அபயங்கருக்கான இசை உரிமம் ரூ. 10 கோடி வரை விற்பனையாவதால் தன் சம்பளத்தை ரூ. 8 கோடி வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Reports indicate that music composer Sai Abhyankar has drastically hiked his remuneration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.