2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மன அழுத்தம் பற்றிய கவிதை... இர்ஃபான் கான் மகனின் சோகமான பதிவு!

நடிகர் பபில் கான் பகிர்ந்த மன அழுத்தம் தொடர்பான கவிதை பற்றி...

News image
நடிகர் பபில் கான். - படம்: இன்ஸ்டா / பபில் கான்.
Updated On :14 அக்டோபர் 2025, 1:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கானின் இன்ஸ்டா பதிவு (கவிதை) சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில் தனக்கு மன அழுத்தம் குறித்து கவிதையாக எழுதியுள்ளார். இந்தப் பதிவுக்கு நடிகர் விஜய் வர்மா வரவேற்பு அளித்துள்ளார்.

பாலிவுட்டில் மிகச்சிறந்த நடிகராக அறியப்பட்டவர் இர்ஃபான் கான். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு புற்று நோய் பாதிப்பினால் இறந்தார்.

இவரது மகன் பபில்கான் குவாலா, ஃபரைடே நைட் பிளான் என்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த லாக் அவுட் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

கட்ந்த மே மாதத்தில் அவர் அழுதுகொண்டே ”பாலிவுட் மிகவும் மோசமானது” என விடியோ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அதை நீக்கிவிட்டு அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்ஸ்டா வந்துள்ள அவர், கவிதை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது:

இரகசியமாகக் கேட்பதைச் சொல்லவில்லை,

இந்தக் கண்ணாடி வீடு மெலிந்த சுவர்களாலானவை.

என் இதயத்தை எனது ஸ்லீவ்ஸில் அணிகிறேன்,

தற்போது, எனது டிஷர்ட் ரத்தத்தினால் நனைந்துள்ளது.

இது குணமாக காலம் தேவைப்படும்,

என்னுடைய பூதம் என்னை ஆழமாக வெட்டிவிட்டது.

தூக்கமின்மை, பயம் சேர்ந்து என்னை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவைக்கிறது,

உதவிக்காக அழுகிறேன், எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மூச்சுத் திணறுகிறது.

என் உடலின் பாரம் அதிகரிக்கிறது, உளவியல் அடக்குமுறையினால் எனது ஆன்மா சலிப்படைந்துவிட்டது.

“நீங்கள் உங்கள் காதலியுடன் சண்டையிடும்போது, நான் எனது மன உளைச்சலுடன் போராடுகிறேன். காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

summary

Actor Babil Khan, son of late actor Irrfan Khan, put out an emotional poem on social media to reveal his battle with depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.