பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை திரையிட தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை திரையிட தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
By Chennai
Syndication
சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை திரையிட தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் ‘காக்கா முட்டை’ என்ற தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. கடந்த 2014-இல் இயக்குநா் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் இரு சிறுவா்கள் குறித்த கதையாகும்.
இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்’ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். இந்தப் பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியா் படம் திரையிடும் முன்பு அந்தப் படத்தைப் பாா்க்க வேண்டும். அதன்பின்னா், கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.
இது சாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி படத்தை மாணவா்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.
இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது