பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தி பாரடைஸ் படப்பிடிப்பில் இணைந்த நானி!

பாரடைஸ் படப்பிடிப்பில் நானி...

News image

நானி

Updated On :29 ஜூன் 2025, 7:21 am

தி பாரடைஸ் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் நானி இணைந்துள்ளார்.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்தன. இதனால், நானி நடிக்கும் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.

அடுத்ததாக, நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

படத்தின் கிளிம்ஸ் விடியோவும் அதில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசையும் இந்தியளவில் கவனிக்கப்பட்ட நிலையில், தி பாரடைஸ் படப்பிடிப்பில் நானி இணைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது.

நானி

நானி

அடுத்த 40 நாள்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக கரடு முரடான பின்னணியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Summary

actor nani joins the paradise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.