புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் - 2 தொடரில் இருந்து விலகியது ஏன் என ஃபரினா கூறியதாவது...

News image

இதயம் தொடரிலிருந்து ஃபரினா ஆசாத். - படம்: யூடியூப் / ஜீ5.

Updated On :28 ஜூன் 2025, 12:06 pm

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். அதில் தனிப்பட்ட காரணத்தினால் விலகியதாகக் கூறியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த மார்ச்சில் நிறைவடைந்தது.

640 எபிசோடுகள் சென்ற இந்தத் தொடரில் மித்ரா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரினா ஆசாத் நடித்திருந்தார்.

தற்போது, இதன் இரண்டாவது பாகத்தில் புதிய நடிகர், நடிகைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், மித்ரா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இது குறித்து ரசிகர்கள் அன்பு மழையாகக் கேள்வி கேட்டதால் நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர், “அக்கா நான் உங்களுக்காகத்தான் இதயம் சீரியலைப் பார்த்து வந்தேன்” எனக் கூறினார். மற்றொருவர், “நீங்கல் இல்லாமால் சீரியல் பார்க்கவே பிடிக்கவில்லை” எனக் கூறினார்.

ரசிகர்களின் குறுஞ்செய்திகள்.

ரசிகர்களின் குறுஞ்செய்திகள். - படம்: இன்ஸ்டா / ஃபரினா ஆசாத்.

இந்தக் குறுஞ்செய்தி, பதிவுகளுக்கு ஃபரினா ஆசாத், “உங்கள் அன்புக்கு நன்றி. எனது தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகினேன். அடுத்த சீரியலில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Actress Farina Azad has explained why she left the series Idayam Season 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.