சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகம்!

மலையாள திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதைப் பற்றி...

News image
ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் போஸ்டர்...
Updated On :27 ஜூன் 2025, 4:21 pm

DIN

மலையாள திரையுலகின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பிரபலங்கள், மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் ஜூன் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானகி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம், அந்தப் படத்தின் தயாரிப்பளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து, மலையாள திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் அதன் முடிவை இன்றே (ஜூன் 27) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தணிக்கை வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஜே.எஸ்.கே. திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, எம்.பி. பத்மகுமார் இயக்கத்தில் உருவான “டோக்கன் நம்பர்” என்ற திரைப்படத்தில் வரும் ஜானகி எனும் கதாபாத்திரத்தின் பெயரானது, ஜெயந்தி என மாற்றப்பட்ட பின்னரே அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

The censor certificate be denied if it is named 'Janaki'. The Malayalam film industry is protesting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.