தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர்!

நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2024, 1:14 pm

நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இது என்னவென்று புரியாமல் இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைப்பதாகவும் அறிமுகம் லோகேஷ் கனகராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த டீசர் சற்று காலதாமதாமாக வெளியாகியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி இதன் முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.