ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பேட்ட பராக்.. ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் புதிய படம்?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :18 ஜூன் 2024, 11:18 am

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகியுள்ளார். படத்திற்குக் கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.

அதேநேரம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு, நடிகர் ரஜினியிடம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை ஒன்றைக் கூறினாராம். அது ரஜினிக்குப் பிடித்திருந்ததாம். ஆனால், லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் ரஜினி - 172 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பல ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைகளும், பாடல்களும் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.