தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நா. முத்துசாமி எழுதிய அர்ஜுனன் தபசு நாடகம்! அனுமதி இலவசம்!

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற நா. முத்துசாமி எழுதிய அர்ஜுனன் தபசு நாடகம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

News image

அர்ஜுனன் தபசு நாடகம் - படம்: இன்ஸ்டா / ஷாலினி

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:41 pm

மத்திய அரசின் கலாச்சார துறையுடன் இணைந்து தேவ்ரிக்ஷா நாடகக் குழு 15ஆவது ஆண்டாக நடத்தும் நாடகத் திருவிழாவில் பல்வேறு நாடகங்கள் நடைபெறவிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பிரபலமான நடிகர்கள் பலர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.முத்துசாமியின் மறைவுக்கு, “தமிழ் கலை உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பென்றும் ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும்” என நடிகர் கமல் கூறியிருந்தார்.

சென்னையில் வரும் ஆக.31, செப்.1ஆம் தேதிகள் (சனி, ஞாயிறு) பத்மஸ்ரீ விருதுபெற்ற நா. முத்துசாமியின் அர்ஜுனன் தபசு நாடகம் நடைபெறவிருக்கிறது.

இந்த நாடகத்தில் திண்டுக்கல் லியோனி மகன் சிவகுமாரும் இன்ஸ்டா புகழ் ஷாலினியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நாடகத்தை ஸ்ரீ தேவி கங்கைய்யா இயக்குகிறார்.

இடம்: கோல்டன் திருமண மண்டபம், சாலிகிராமம், சென்னை.

தேதி : ஆக.31, செப்.1. நேரம்: இரவு 7-8 மணி.

இரண்டு நாள்களும் நடைபெறும் இந்த நாடகத்து அனுமதி இலவசம். நாடகம், சினிமா கலையியக்க விரும்பிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல் நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி எழுதிய சிலப்பதிகாரம் நாடகம் இயக்குநர் பார்த்திப ராஜா இயக்கத்தில் நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளையும், மாலை 6 மணிக்கு துடும்பாட்டம் நிகழ்ச்சியும், 7 மணிக்கு அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற இருக்கிறது.

இரண்டாம் நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு வைக்கோம் முகமது பஷீர் எழுதிய இயக்குநர் டாக்டர் ஆழி இ. வெங்கடேசன் இயக்கத்தில் மதில்கள் நாடகமும், மதியம் 3.15 மணிக்கு டாக்டர் கார்த்திகேயன் எழுதிய இயக்கிய அய்யன் வள்ளுவன் நாடகமும் நடைபெறுகிறது.

மாலை 5.30 தேநீர் இடைவேளையும், மாலை 6 மணிக்கு அம்புஜவள்ளி மற்றும் 6.30 மணிக்கு வித்யா ஆகியோரின் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு 7 மணிக்கு பத்மஸ்ரீ விருதுபெற்ற நா. முத்துசாமியின் அர்சுனன் தபசு நாடகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.