தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

80% பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள், ஸ்ரீ ரெட்டி யாரென்றே தெரியாது! நடிகர் விஷால்

பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை செருப்பால் அடியுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

News image

நடிகர் விஷால்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:56 am

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா அறிக்கையின் தொடா்ச்சியாக பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல் துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேரள அரசு அமைத்தது.

இதற்கு மத்தியில், கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் முக்கியப் பொறுப்பிலிருந்து இயக்குநா் ரஞ்சித், நடிகா் சித்திக், மோகன்லால் ஆகியோா் திடீரென விலகினார்கள்.

இது குறித்து நடிகர் விஷாலிடம் சென்னையில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் பேசியதாவது:

ஹேமா கமிட்டிபோல் தமிழகத்திலும் அமைக்கப்படும். இங்கும் பாலியல் தொல்லைகள் இருக்கலாம். நடிகைகள் ஏமாற்றப்படலாம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

எனக்கு ஸ்ரீ ரெட்டி யாரென்றே தெரியாதே. அவர் செய்த சேட்டைகள் மட்டுமே தெரியும். இது மிகவும் தவறான விசயம். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

யாராவது வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் எனக் கேட்டால் செருப்பால் அடியுங்கள். பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். உண்மையாகவே படம் எடுக்கிறார்களா என விசாரிக்க வேண்டும்.

20 சதவிகிதம்தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80 சதவிகிதம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

நடிகர் விஷால் தனது 48ஆவது பிறந்தநாள் விழாவுக்காக சென்னை கீழ்பாக்கத்தில் பொதுமக்களுக்கு விருந்தளித்தார். தற்போது துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே எழுதி இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.