ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நடிகை ரேகா நாயர் கார் மோதியதில் ஒருவர் பலி!

நடிகை ரேகா நாயரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது பற்றி...

News image

ரேகா நாயர் - Instagram

Updated On :28 ஆகஸ்ட் 2024, 4:03 am

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் மதுபோதையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை போக்குவரத்து புலனாய்புப் பிரிவு போலீஸார், ரேகா நாயரின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் மதுபோதையில் சாலையில் படுத்துக் கிடந்த மஞ்சன்(வயது 55) என்பவர் மீது செவ்வாய்க்கிழமை கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் மஞ்சனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மஞ்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் போலீஸார் கார் எண்ணை வைத்து ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் நடிகை ரேகா நாயரின் ஓட்டுநர் என்றும், அவர் ஓட்டிய கார் ரேகா நாயரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரேகா நாயர், 2022-ஆம் ஆண்டு பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும், விபத்து ஏற்பட்டபோது காரில் ரேகா நாயர் பயணித்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.