ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காளி வெங்கட் வில்லன்! யோகி பாபு, லட்சுமி மேனனின் மலை திரைப்படம் ரிலீஸ் எப்போது?

நடிகர் யோகி பாபு, லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ள மலை படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

காளி வெங்கட், யோகி பாபு, லட்சுமி மேனன்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 12:15 pm

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனகாவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து மலை என்ற படத்தில் நடிப்பதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரன், சீனுராமசாமி இடம் உதவி இயக்குநராக இருந்தவ ஐபி முருகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் லஷ்மி மேனன் மருத்துவராக நடித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் இதனை தயாரிக்கிறது.

இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமெனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட், சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக இது அவருக்கு முதல்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.