சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

''விஜய் சாரும் லோகேஷ் சாரும் இல்லனா, இது நடந்திருக்காது'' - அர்ஜுன் தாஸ் உருக்கம்

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:41 am

DIN

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 

கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தற்போது ஹிந்தி படமொன்றில் நாயகனாக நடித்துவருகிறார். மலையாளத்தில் விமர்சன ரீதியாக பெறும் வரவேற்பை பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். 

இந்தப் படத்தை கேடி என்கிற கருப்பு துரை பட இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.  இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், என்னுடைய முதல் ஹிந்தி படம். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இதனை எழுதும்போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன. 

முதலில் விஜய் சாருக்கும், இயக்குநர் லோகேஷுக்கும் பெரிய நன்றி. நான் இதனை முன்பே சொல்லியிருக்கிறேன். தற்போது மீண்டும் சொல்கிறேன். உங்கள் இருவருக்கும் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

பலருக்கு நான் ஏன் இருவருக்கும் நன்றி சொல்கிறேன் என ஆச்சரியமாக இருக்கும். காரணம் மாஸ்டர் படம் இல்லையென்றால் எனக்கு இந்த வேடம் கிடைத்திருக்காது. அதனால் லோகேஷ் சார், விஜய் சார் மற்றும் ஒட்டுமொத்த மாஸ்டர் படக்குழுவுக்கும் நன்றி. 

இந்தப் படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது முதலில் என்னுடைய பெற்றோர், இயக்குநர் லோகேஷ் சார் மற்றும் விஜய் சார் ஆகியோரிடம் தான் தெரிவித்தேன். 

என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி மதுமிதா மேம். இந்த வாய்ப்புக்காக விக்ரம் சாருக்கு நன்றி. உங்கள் நிறுவனத்துடன் பணிபுரிவது பெறுமை. கத்தி படம் முதல் எனக்கு ஆதரவளித்துவரும் பத்திரிக்கை நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் பர்வையாளர்களுக்கு நன்றி. நான் உங்கள் ஆசிர்வாதங்களுடன் இந்த அழகான பயணத்தை தொடர்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.