மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக எழுதிய கவிதைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:29 pm

எழில்

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக எழுதிய கவிதைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துக்குமார் (41) உடல் நலக்குறைவால் 2016 ஆகஸ்ட் 14 அன்று காலமானார்.  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் மருத்துவமனையில் அதற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கவிஞர் முத்துக்குமாருக்கு மனைவி தீபலஷ்மி, மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி ஆகியோர் உள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முத்துக்குமார் அழகே அழகே (சைவம்), ஆனந்த யாழை (தங்க மீன்கள்) ஆகிய பாடல்களுக்காக இரு முறை பெற்றுள்ள தேசிய விருதுகள் பெற்றார். 

ஆதவன் எழுதியுள்ள பொங்கல் பண்டிகை கவிதைகள்

போகி

நீ உன் ஆணவத்தை அன்பில் எரி

இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி

கோயிலில் இருக்கும் தேரு

பானையை செய்ய தேவை சேறு

வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு

இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு

தமிழரின் பெருமை மண் வாசனை

இந்த கவிதை என் யோசனை.

தைப் பொங்கல்

உழவர்களை அண்ணாந்து பாரு

உலகத்தில் அன்பை சேரு

அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு

அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு

உழவர்கள் நமது சொந்தம்

இதை சொன்னது தமிழர் பந்தம்

பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்

இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!

மாட்டுப் பொங்கல்

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு

கரும்பை இரண்டாக வெட்டு

நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு

சிப்பிக்குள் இருக்கும் முத்து

மாடு தமிழர்களின் சொத்து

மாடு எங்கள் சாமி

நீ உன் அன்பை இங்குக் காமி!

காணும் பொங்கல்

உறவினர்கள் வந்தார்களா என்று பாரு

உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு

நீ அழகாகக் கோலம் போடு

உன் நல்ல உள்ளத்தோடு

நீ உனக்குள் கடவுளைத் தேடு

இல்லையென்றால் நீ படுவாய் பாடு

பெண்ணைக் கண்ணாகப் பாரு

இல்லையென்றால் கிடைக்காது சோறு!

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.