இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பாலிவுட் நடிகர் கொடுத்த பணம்?: டிக்டாக் விடியோவால் பரபரப்பு !

தில்லியில் கஷ்டப்படும் மக்களுக்கு  கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பிரபல பாலிவுட் நடிகர்  கரோனா நிவாரண நிதி கொடுத்தாரா என ஒரு டிக்டாக் விடியோவால் கேள்வி எழுந்துள்ளது.   

News image
பாலிவுட் நடிகர் ஆமிர்கான்
Updated On :27 ஜனவரி 2024, 4:32 pm

IANS

மும்பை: தில்லியில் கஷ்டப்படும் மக்களுக்கு  கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பிரபல பாலிவுட் நடிகர்  கரோனா நிவாரண நிதி கொடுத்தாரா என ஒரு டிக்டாக் விடியோவால் கேள்வி எழுந்துள்ளது.   

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 27,977 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 884 பேர் பலியாகியுள்ளனர்.

லும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.  

இந்நிலையில் தில்லியில் கஷ்டப்படும் மக்களுக்கு  கோதுமை மாவு பாக்கெட்டுகளில் பிரபல பாலிவுட் நடிகர்  கரோனா நிவாரண நிதி கொடுத்தாரா என ஒரு டிக்டாக் விடியோவால் கேள்வி எழுந்துள்ளது.   

இதுதொடர்பாக சமூக வலைத்தளமான டிக்டாக்கில் விடியோ ஒன்று உலா வருகிறது. இன்னும் உண்மைத்தன்மை உறுதி செயப்படாத அந்த  விடியோவில் பேசும் நபர் கூறுவதாவது:

கடந்த 23–ஆம் தேதியன்று தில்லியில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்கள்  வசிக்கும் பகுதி ஒன்றிற்கு ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு ட்ரக் ஒன்று வந்துள்ளது. அதைப் பெற்றுக் கொள்ளுமாறு அதில் இருந்தவர்கள் கூறியபோது, ஒரு கிலோ என்பது தங்கள் குடும்பத்திற்கு போதுமான ஒன்றல்ல என்று கூறி பெரும்பான்மையானவர்கள் மறுத்து விட்டனர். ஆனால் அதையும் தாண்டி பாக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு வீடு சென்றவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ஒவ்வொரு பாக்கெட்டின் உள்ளேயும் ரூ.15000  பணம் இருந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருந்தார் என்று கூறும் அந்த விடியோவில் உள்ள நபர், தகுந்த மற்றும் தேவையுள்ள நபர்களுக்கு உதவிகள் போய்ச்சேர இதுவே சிறந்த வழி என்று நினைத்து ஆமிர் கான் இப்படி செய்தார் என்று கூறுகிறார்.

ஆனால் தற்போது வரை நடிகர் ஆமிர் தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.