ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பகலிரவு டெஸ்ட் நடைபெறும் ஈடன் கார்டன்ஸில் தனது படத்தை விளம்பரப்படுத்தவுள்ள நடிகை ராணி முகர்ஜி!

கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவம் அற்புதமாக இருக்கும் என என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள்.

News image
Updated On :21 நவம்பர் 2019, 12:31 pm

இந்தியா - வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் நடைபெறவுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், தான் நடித்த மர்தானி 2 படத்தை விளம்பரப்படுத்தவுள்ளார் நடிகை ராணி முகர்ஜி. கோபி புத்ரன் இயக்கியுள்ள மர்தானி 2 படம் டிசம்பர் 13 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் ராணி முகர்ஜி நடித்துள்ளார்.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு செல்வது குறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:

ஈடன் கார்டன்ஸில் முதல்முறையாக கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கவுள்ளேன். அந்த மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவம் அற்புதமாக இருக்கும் என என் பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். எனவே எனக்குப் புது அனுபவம் கிடைக்கப் போகிறது. அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பல லட்சம் ரசிகர்களுக்கும் மர்தானி 2 படம் குறித்து பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.