ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 7:29 am

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக நீடிக்க வைப்போம்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம்...

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) மறுப்பு சொல்வோம்...

மாணவர்கள் மீதான காவலர்களின் தாக்குதலுக்கு மறுப்பு சொல்வோம்...

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

அஸ்ஸாமில் கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணி (என்ஆர்சி) கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.