மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

24 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மீனா

கடைசியாக 1995-ல் வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா.

News image
Updated On :10 டிசம்பர் 2019, 5:54 am

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இப்படத்துக்கு இசை - இமான். நகைச்சுவை நடிகராக சூரி நடிப்பது குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தனது 25-வது படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் மேலும் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜ், மீனா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடைசியாக 1995-ல் வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. அதன்பிறகு, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் 2011-ல் வெளியான தம்பிக்கோட்டை என்கிற படத்துக்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடிக்கிறார் மீனா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.