2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நயா பைசாவும் வேண்டாம்: சர்ச்சையில் முடிந்த 2.0 பட சப்டைட்டில் சம்பள விவகாரம்!

2.0 படத்துக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தும் தனக்கு இன்னமும் ஊதியம் தரப்படவில்லை என...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:57 am

எழில்

2.0 படத்துக்கு சப் டைட்டில் செய்த விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் சப் டைட்டில் கலைஞர் ரேகா, தனக்கான ஊதியத்தைப் பெற மறுத்துள்ளார். 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்துக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தும் தனக்கு இன்னமும் ஊதியம் தரப்படவில்லை என அப்படத்துக்கு சப்டைட்டில் செய்த ரேக்ஸ் என்கிற ரேகா ட்விட்டரில் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 

சப்டைட்டிலுக்கான எங்களுடைய பட்ஜெட் - ரூ. 50,000. ஆனால் ரேகா 2 லட்சம் கோரினார். அவருடைய விருப்பத்தின் பேரில் 2.0 படத்தின் பணிகளைத் தொடங்கினார். சம்பளம் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அவர் சொன்ன தொகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிறகு ஊடகங்ளிடம் சென்று எங்களைப் பற்றித் தவறாகப் பேசினார். 10 நாள்களுக்கு முன்பு அவரைத் தொடர்பு கொண்டு, சப்டைட்டிலுக்கான பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ. 1 லட்சம் தருவதாகச் சொன்னோம். ஆனால் அதை ஏற்க மறுத்து ரூ. 2 லட்சம் கேட்டார் ரேகா. அது மார்க்கெட் ரேட் கிடையாது. நாங்கள் யாருக்கும் சம்பளப் பாக்கி வைப்பதில்லை. எங்கள் நற்பெயரைக் கெடுக்கவேண்டும் என்கிற காரணத்துக்காக ஊடகங்களிடம் எங்களைப் பற்றி புகார் அளித்துள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

லைகா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தனியாகப் பதில் அளித்துள்ள ரேகா, தனக்கு நயா பைசாவும் வேண்டாம் என்று தனக்கான ஊதியத்தை மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.