ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பொள்ளாச்சியில் நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்!

முறையான ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா பயன்படுத்திய கேரவன் வண்டியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

News image
Updated On :31 மே 2017, 9:45 am

முறையான ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் - பாக்மதி (Bhagmati). தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது. ஜி. அசோக் இயக்கி வரும் இப்படத்தில் ஜெயராம், ஆஷா சரத் போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மதி. இசை - தமன். பாகுபலி 2-வின் வெற்றிக்குப் பிறகு இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பாக்மதி, ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பொள்ளாச்சியில் தங்கியுள்ளார் அனுஷ்கா.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வரும் கேரவன் வண்டி படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதை வாகனத் தணிக்கை செய்தார்கள் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள். அப்போது கேரவனில் உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவ்வாகனத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வரிபாக்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.