இதற்கு நடுவில், திலீப், மஞ்சு வாரியர், காவ்யா மாதவன் முக்கோணக் கதையில் நடிகை ஏன் பலி வாங்கப் பட்டார்? என்றொரு கேள்வி வருகிறதில்லையா? பாதிக்கப்பட்ட அந்த நடிகை, பல காலமாகவே மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழி. திலீப்புக்கும், மஞ்சு வாரியருக்கும் பிணக்கு ஏற்பட்ட முதற்பொழுதில், நட்சத்திரக் கலைவிழாவுக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றிருந்தனர் மலையாள நடிகர், நடிகைகள்.. அப்போது அந்தக் குழுவில் நடிகையும் ஒருவர். அந்தக் கலை விழாவில் திலீப் மற்றும் காவ்யா மாதவனின் நடவடிக்கைகள் கணவன், மனைவி போல அந்நியோன்யமாக இருந்ததாக நடிகை, மஞ்சு வாரியரிடம் தெரிவிக்கவே இதனால் மஞ்சு வாரியருடனான திலீப்பின் குடும்ப வாழ்க்கை ஆட்டம் கண்டது. இந்தக் கோபத்தை மனதில் வைத்து தான் திலீப் இப்படி வஞ்சம் தீர்த்துக் கொண்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது திலீப்பின் வாக்குமூலம் அதை உறுதி செய்திருக்கிறது. நடிகையைக் கடத்த பல்சர் சுனிக்கு திலீப் 50 லட்சம் ரூபாய் அளித்ததாக ஒப்புக் கொண்டதாக காலையில் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதையொட்டியே நேற்று முன் தினம் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப் பட்டு 2 நாட்கள் காவல்துறை கஸ்டடியில் விசாரிக்கப் படவிருக்கிறார் திலீப்.