பிரபல நடிகை நந்திதா தாஸ், தனது கணவர் சுபோத் மஸ்கராவைப் பிரிய முடிவெடுத்துள்ளார். இவர்களுடைய 7 வருட திருமண வாழ்க்கையில் விஹான் என்கிற 6 வயது மகன் உண்டு.
2002-ல் செளம்யா சென்னைத் திருமணம் செய்தார் நந்திதா தாஸ். இருவரும் 2007-ல் விவாகரத்து செய்தார்கள். பிறகு 2010-ல் சுபோத்தைத் திருமணம் செய்து தற்போது அவரைப் பிரிய முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் நந்திதா தாஸ் கூறியதாவது: ஆமாம். நாங்கள் பிரிவதாக வெளியான செய்திகள் உண்மையே. இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருவருக்குமே எங்கள் மகனின் வாழ்க்கை முக்கியம். எனவே எங்கள் மூவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். பிரிவது குறித்து மறைப்பதில் ஒன்றும் இல்லை. மேலும் இதுகுறித்து பேசவும் ஒன்றுமில்லை. ஒரு மகன் இருக்கையில் கணவரைப் பிரிவது என்பது அவ்வளவு எளிதல்ல. எங்களுக்கு மகனின் வாழ்க்கை முக்கியம். அவன் நன்றாக வளர்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். நான் இயக்கும் மண்டோ படம் முடிவடையும் வரை நான் மும்பையில் இருப்பேன். அதற்குப் பிறகு நான் வளர்ந்த தில்லிக்கே செல்லலாமா என யோசித்துவருகிறேன் என்று கூறினார்.
சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவு குறித்து வெளிப்படையாக பேசமறுத்துவிட்டார் நந்திதாதாஸ். ஒரே துறையில் பணியாற்றியதால் பிரிய நேர்ந்ததா என்கிற கேள்விக்கு நந்திதா தாஸ் கூறியதாவது:
திருமண உறவுகளில் விதிமுறைகள் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்ததால் இந்தப் பிரிவு ஏற்படவில்லை. சிலசமயங்கள் சில ஜோடிகள் அற்புதமாக வாழ்வார்கள். உண்மையில் நானும் சுபோத்தும் ஒரே துறையில் பணிபுரிவது கிடையாது. ஒரேயொரு நாடகத்தில் மட்டும் இருவரும் இணைந்து பணியாற்றினோம். எனவே ஒரே துறையில் பணியாற்றுபவர்களால் ஒற்றுமையாக வாழமுடியாது என்று நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. உறவுகள் மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


