மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (சிபிஎஃப்சி) தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய அரசு நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியரான பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தணிக்கைக் குழுவைச் சேர்ந்த புதிய உறுப்பினர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பஹலாஜ் நிஹலானி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவியை வகித்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அவர் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக தணிக்கை வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அண்மையில், பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கிய, நெருக்கடி நிலை காலத்தைச் சித்திரிக்கும் 'இந்து சர்க்கார்' என்ற படத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சிகளை வெட்டுமாறு தணிக்கை வாரியம் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 'லிப்ஸ்டிக் அண்டர் மை பர்க்கா' என்ற படத்தைத் திரையிட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்ததும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நீக்கியது. அப்பொறுப்புக்கு பிரபல பாலிவுட் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தப் பொறுப்புக்கு பிரபல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா, இயக்குநர் மதுர் பண்டார்கர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தணிக்கைக் குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 12 பேர்:
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், கெளதமி, ஜீவிதா ராஜசேகர், வாணி திருப்பதி, ஸ்ரீனிவாசையா நாகபாரணா, ரமேஷ் பதாஞ், மிஹிர் பூடா, நரேஷ் சந்தர் லால், நரேந்திர கோலி, நைல், வாமன் கேந்த்ரே, விவேக் அக்னிஹோத்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


