பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார்...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 5:33 am

நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார். இந்த விளம்பரம் தொடர்ந்து தொலைக்காட்சிகளி ஒளிபரப்பானதால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் காஜல் அகர்வால்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், நான் நடித்த விளம்பரத்தை ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்பவேண்டும். ஆனால் ஒரு வருட ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். இதனால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் விவிடி நிறுவனத்தின் தரப்பில், அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் எழுதப்படவில்லை. எனவே அந்த விளம்பரத்தை 60 வருடங்களுக்கு ஒளிபரப்ப உரிமை உள்ளது என்று கூறப்பட்டது.

இதையடுத்து காஜல் அகர்வாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்குக்கான செலவை விவிடி நிறுவனத்துக்குச் செலுத்தவும் காஜல் அகர்வாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.