நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வெளிநாடு செல்ல நடிகை குஷ்புவுக்கு அனுமதி!

வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:23 pm

எழில்

வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகை குஷ்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆண்டிப்பட்டி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிப்பட்டி போலீஸார் என்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. மேலும் எனது கடவுச்சீட்டை புதுப்பித்து தரக்கோரிய வழக்கில், நான் வெளிநாடு செல்லும்போது எந்த நாட்டுக்கு செல்கிறேன். எங்கு தங்குகிறேன் என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எனது குடும்பத்துடன் பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்நிலையில், வெளிநாட்டுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல குஷ்புவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.