நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்துக்குத் தேசிய விருது கிடைக்காதது ஏன்? பிரியதர்ஷன் விளக்கம்

சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் தனக்குப் பிடித்ததாகவும் ஆனால்... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

எழில்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வானது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டார்கள். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்தது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வானார். பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்தது.

சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். விமரிசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் தனக்குப் பிடித்ததாகவும் ஆனால் அது பிராந்தியத் தேர்வுக்குழுவால்கூட தேர்வு செய்யப்படவில்லை எனவும் இயக்குநர் பிரியதர்ஷன் கூறியுள்ளார். தேசிய விருது குறித்த சர்ச்சைகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் அப்பா படம் குறித்து அவர் கூறியதாவது: தேர்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் முன்பு அப்பா, லீலா, Guppy போன்ற படங்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தன. ஆனால் இந்தப் படங்கள் பிராந்தியத் தேர்வுக்குழுக்களால் தேர்வு செய்யப்படவில்லை. ஆக விருது வந்த 334 படங்களில் எனக்குப் பிடித்த பல படங்கள் தேசியத் தேர்வுக்குழுக்கள் பார்த்த 86 படங்களுக்குள் இடம்பெறவில்லை. இந்த 86 படங்களில் இருந்து 38 தேர்வுக்குழுவினர்கள் தேசிய விருதுக்கான படங்களையும் கலைஞர்களையும் தேர்வு செய்தார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.