பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான கலாபவன் மணி, சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் அதே நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திசுக்கள் ஹைதராபாதில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, மணியின் உடலில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்தான குளோரோபைரிஃபோஸ் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மணியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி (மார்ச் 6) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் வந்து நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் சாலக்குடியில் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஓராண்டாகக் காத்திருந்தோம். உரிய நீதி கிடைக்காவிட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு முன் போராட்டம் நடத்துவோம்' என்றார். இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கலாபவன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


