கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கலாபவன் மணி மர்ம மரணம்: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:16 pm

எழில்

பிரபல திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான கலாபவன் மணி, சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் அதே நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திசுக்கள் ஹைதராபாதில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, மணியின் உடலில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்தான குளோரோபைரிஃபோஸ் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மணியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி (மார்ச் 6) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் வந்து நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் சாலக்குடியில் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஓராண்டாகக் காத்திருந்தோம். உரிய நீதி கிடைக்காவிட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு முன் போராட்டம் நடத்துவோம்' என்றார். இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கலாபவன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.