பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

'காற்று வெளியிடை’ விமரிசனங்களுக்கு மணி ரத்னம் ஆதாரபூர்வ விளக்கம்!

காற்று வெளியிடை படத்தில் சொல்லப்பட்ட முக்கியமான குறை ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 10:26 am

காற்று வெளியிடை படத்தில் சொல்லப்பட்ட முக்கியமான குறை ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜெயிலில் இருந்து தப்பிப்பதுபோல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது பல விமரிசகர்களால் குறை சொல்லப்பட்டது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து குழி தோண்டி அதிலிருந்து கார்த்தி தப்பிப்பது போன்று அமைக்கப்பட்ட காட்சிக்கு நிறைய விமரிசனங்கள் எழுந்தன.

இதற்கு மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இக்காட்சி பல உண்மைச் சம்பவங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. ஃபிளைட் லெஃப்டினண்ட் திலிப் பருல்கர் 1971 டிசம்பர் 10-ல் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டார். ஆனால் அழிவுக்கு நிகரான இந்தச் சம்பவத்தை அவர் துணிகரச் செயலாக மாற்றினார். ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்ட பருல்கர், மல்விந்தர் சிங், ஹரிஷ் ஆகியோர் அச்சிறையில் இருந்து 1972 ஆகஸ்ட் 13 அன்று தப்பி வந்தார்கள். 

ஃபெயித் ஜான்ஸ்டன் எழுதிய ஃபோர் மைல்ஸ் டூ ஃப்ரீடம் என்பது அவர்களின் இந்தச் செயலை விளக்கும் புத்தகம் ஆகும். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் படத்திலும் இடம்பெற்றுள்ளன. தப்பிப்பதற்காக கார்த்தியும் அவர் நண்பர்களும் செய்தது, நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு ஆகும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மணி ரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.