இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

குபேரா பட விழாவில் சிரஞ்சீவி கொடுத்த இன்ப அதிர்ச்சி! தனுஷ் நெகிழ்ச்சி

தனுஷுக்கு சிரஞ்சீவி பாராட்டு...

News image

தனுஷுக்கு சிரஞ்சீவி பாராட்டு...

Updated On :23 ஜூன் 2025, 3:53 pm

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனுஷைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தார் நடிகர் சிரஞ்சீவி.

குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. குபேராவில் தனுஷ் வழக்கம்போல தமக்கே உரிய இயல்பான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் என்றே பல தரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் படம் பாராட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, குபேரா படம் வெளியாகிய 3 நாள்களில், குபேரா வெற்றிவிழா ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 22) ஹதராபாத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மேடையில் பேசிய சிரஞ்சீவி, குபேராவில் தேவா கதாபாத்திரத்தை தனுஷைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்க முடியாதெனப் பேசினார்.

தனுஷின் நடிப்புக்கு தேசிய விருது வழங்க வேண்டும். அவருக்கு அந்த சிறப்பு கிடைக்கவில்லையென்றால், அந்த விருதுகளுக்கே அர்த்தமில்லாமல் pஓய்விடும். சிறப்பாக நடித்திருந்தார் தனுஷ் என்று தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதேபோல, நாகார்ஜுனாவையும் இயக்குநர் சேகர் கம்முலாவையும் சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டினார்.

இவ்விழாவில் சிரஞ்சீவி தனுஷை இறுக்கி அணைத்து கட்டிபிடித்துப் பாராட்டியதில் தனுஷ் நெகிழ்ச்சியடைந்தார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.