/

சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

எனது தேவதை சினேகா, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று அவர் ட்வீட் செய்தார்...

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:18 am

எழில்

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசன்னா – சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பிரசன்னா அறிவித்தார். ஜூன் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது.

இந்நிலையில், இன்று காலை பிரசன்னா -சினேகா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ட்விட்டர் வழியாக பிரசன்னா அறிவித்தார். ‘நேற்றைய தினம் மிகவும் நீண்ட நாளாக அமைந்தது. நேற்றைய இரவு ஒரு பிரகாசமான இரவு. அந்த நீண்ட இரவு மகிழ்ச்சியுடன் விடிந்தது. ஆம், எனது தேவதை சினேகா, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்’ என்று அவர் ட்வீட் செய்தார்.

Story image

இதைத் தொடர்ந்து சினேகா, பிரசன்னா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.