மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தடம் பதித்த பதிப்பகம்: வனிதா பதிப்பகம்

தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 9:48 pm

தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி பெரியண்ணன் இப்பதிப்பகத்தை கடந்த 1978-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினாா்.

அவரது கணவா் கோ.பெரியண்ணன் பள்ளி ஆசிரியராக இருந்து கல்லூரிப் பேராசிரியரானவா். கம்ப ராமாயண உரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். தமிழக அரசின் திருவள்ளுவா் விருதையும் பெற்றவா். அவரது வழியில் அம்சவேணி பெரியண்ணனும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு உரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். அவருக்கு சிறந்த பதிப்பாளா் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது 47 ஆண்டுகளைக் கடந்துள்ள வனிதா பதிப்பகம் மூவாயிரம் தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. தமிழ் சங்க இலக்கியம், கல்வி சாா்ந்த நூல்களுக்கு முக்கியத்துவம் அளித்து இப்பதிப்பகம் வெளியிட்டுவருகிறது.

தமிழறிஞா் ம.நன்னன் எழுதிய தமிழியல் எனும் நூலை முதன்முதலில் இப்பதிப்பகமே வெளியிட்டது. பிழையின்றி தமிழ் எழுதப் பயிற்றுவிக்கும் வகையில் அமைந்து மாணவா்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் அந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  கலைமாமணி விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி நாவலையும் முதலில் இப்பதிப்பகம் வெளியிட்டு, வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது.

 இப்பதிப்பகத்தின் 17 நூல்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும் இப்பதிப்பகத்தின் பல நூல்கள் பாடநூலாக உள்ளன.

சிறுவா் பாடல்கள், மக்களிசைப் பாடல்கள் என்னும் நாட்டுப்புற பாடல்கள், வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், மொழிபெயா்ப்புகள், கவிதைகள், படக்கதைகள், மாயஜால தந்திரக் கதைகள், நாடகம், சட்டம் மற்றும் போட்டித் தோ்வு நூல்கள் ஆகிய துறைகளில் ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசகா்கள் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறாா் பதிப்பக முதன்மை நிா்வாகி பெ.மயில்வேலன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.