தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவலுக்கு இலக்கிய முன்னோடிகள் அளித்த நூல் விமர்சனம்...

தினமணி வாசகர்களில் யாரேனும் இந்த நாவலை வாசித்திருக்கிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது விமர்சனந்த்தை எங்களுக்கு அனுப்பலாம். தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி செக்‌ஷனில் அது பிரசுரிக்கப்படும்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:05 am

கார்த்திகா வாசுதேவன்

பாவை சந்திரனின் நல்ல நிலம் நாவல் தமிழின் மிக முக்கியமான சமூக இலக்கியப் படைப்புகளில் ஒன்று. இரண்டாம் உலகப் போர் முடிந்து இந்தியா சுதந்திரப் போராட்டமும் முற்றுப் பெற்று ஒருவழியாக விடுதலை கிட்டும் தருணத்தில் இந்தக் கதை நிகழ்ந்திருக்கிறது. இது நிஜமான சம்பவங்களின் மீதான அனுபவக் குறிப்பாக இருந்த போதிலும் வாசிக்கும் எவரொருவருக்கும் தங்களையும் நாவலில் ஒரு பாத்திரமாக கருதிக் கொண்டு வாசிக்கும் அளவுக்கு வாசக இதயத்தில் ஊடுருவும் தன்மையை தன்னகத்தே கொண்டதாக இப்பெருநாவல் விளங்குகிறது. புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த காலத்தில் பரவலான வாசக கவனம் பெற்ற நாவல்களில் ஒன்றாகவும் விளங்கியிருக்கிறது. கதையின் நாயகியான ‘காமு’ நம் எல்லோரது வீடுகளிலும் பாட்டியாகவோ, அத்தையாகவோ, சிற்றன்னையாகவோ, அம்மாவாகவோ இருக்கக் கடவது தான் இந்நாவலின் ஆகச் சிறந்த அம்சம். இந்தியப் பெண்களின் சமரச வைராக்ய உருவகத்துக்கு காமுவைக் காட்டிலும் வேறு நல்ல உதாரணங்களை நம்மால் காட்டி விட இயலாது. 

1998 ஆம் வருடம் சென்னை, பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற இந்த நாவல் குறித்த அறிமுகக் கூட்டத்தில் தமிழ்ப்படைப்புலக ஜாம்பவன்களான அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, சு.வேணுகோபால் உள்ளிட்டோர் இந்நாவலுக்கு அறிமுக உரை அளித்துள்ளனர். அவற்றில் வெங்கட்சுவாமிநாதன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி ஆகியோரது அறிமுக உரைகளின் தொகுப்பை தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி பகுதியில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது தினமணி.

வெங்கட் சாமிநாதனின் விமர்சனம்...

Story image
Story image
Story image
Story image
Story image

ஞானக்கூத்தனின் விமர்சனம்...

Story image
Story image
Story image
Story image
Story image

சா.கந்தசாமியின் விமர்சனம்...

Story image
Story image
Story image
Story image

தினமணி வாசகர்களில் யாரேனும் இந்த நாவலை வாசித்திருக்கிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது விமர்சனந்த்தை எங்களுக்கு அனுப்பலாம். தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி செக்‌ஷனில் அது பிரசுரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.