நவில்தொறும் நூல்நயம்!

புதிதாக எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லாமல் பழம்நூல்களை மீள்பதிக்கின்ற முயற்சிகளும் வெற்றியடைகின்றன. இவற்றுள் பல அரிய பெட்டகங்களும் உண்டு. பொதுவாகவே தமிழிலக்கியங்கள் ஏட்டுச் சுவடிப் பெட்டகங்களாகப் பனையோலைகளிலிருந்து கிடைத்தவைதான்.

நூல் என்ற சொல்லோடு பல சொற்கள் நூலின் திறத்தைக் குறிப்பன. நுவல்வது - நுவலப்பட்டது - நூல் ஆயிற்று. ஆதியிலே மனிதன் எழுதுமுறை, எழுதப்பட்ட பொருள், பொருள் பொதிமுறை கொண்டு (ஏடு, ஓலை, சுவடி, தூக்கு!, பனுவல், புத்தகம், பொத்தகம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்நூலின் ஆதி வடிவம் சுவடியேயாகும்.

சுவடி என்ற சொல்லுக்கு ஆழ்ந்த பொருளுண்டு. நாம் நடந்து செல்லும் தடத்தைச் சுவடு என்பதைப் போல, எழுத்து பதிந்து சென்ற தடத்தை ஓலையை சுவடி என்று அழைத்தார்கள் போலும்.

அந்தக் காலப் பாடப்புத்தகங்கள் கூடச் சுவடிகளாகத்தான் இருந்தன. சுவடிகளை வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித் தூக்கு என்று பெயர். அந்தச் சுவடித் தூக்கு ஒருவகையான உறிபோன்ற அமைப்பில் இருக்கும்.

பழங்காலத்து மாணவர்களுக்கு மணல் தான் எழுதப் பயிலும் கரும்பலகையாக இருந்தது. அதுபோலப் பனையேடுகள்தான் புத்தகங்களாக அவை இரும்பினாலும் மரத்தினாலும் இணைத்துச் செய்யப் பெற்ற எழுத்தாணியைப் பேனாவாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஏடுகளை வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டதால் அந்தக் காலப் பள்ளிகளுக்கு ஏட்டுப் பன்ளிக் கூடம் என்றே பெயர்கள் அமைந்தன.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..