புதிய கார்களை கிட்டத்தட்ட பாதி விலையில் வாங்க வேண்டும் என்றால்..
கார் தரகர்கள் எல்லாம் இல்லை. வங்கிகளிடமிருந்தே வாங்கலாம்.
ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ரூ.5 - 7 லட்சம் வரையில் கூட வாங்க முடியும்.
இந்த சலுகையை யார் தருகிறார்கள்? வங்கிகள்தான் இந்த சலுகையை தருகிறார்கள்.
கடன் பெற்று கார் வாங்கி தவணையை திரும்ப செலுத்தாத கார்களை பறிமுதல் செய்து ஏலம் விடுகிறார்கள். வங்கிகளுக்கு இதில் லாபம் தேவையில்லை.
இந்த கார்கள்தான் 50 முதல் 70 சதவீத விலைச் சலுகையில் விற்பனையாகின்றன.
நல்ல நிலையில் இருக்கும் கார்கள் கூட ரூ.3 லட்சம் முதல் கிடைக்கும்.
ஏன் இந்த அளவுக்கு விலை குறைவு? பறிமுதல் செய்த காரை விற்று உடனடியாக ரொக்கமாக மாற்ற வேண்டும்.
எங்கு பதிவு செய்ய வேண்டும்? eAuctionsindia.com AutoBSE.com Foreclosureindia.com
கோப்புப் படம்
இதில், ஒருவர் இருக்கும் நகரைத் தேர்வு செய்து, அங்குள்ள வங்கிகளின் ஏல விவரங்களை அறியலாம்.
உங்கள் விவரங்களைப் பதிவு செய்து ஏல விவரங்களை அறியலாம். ஆன்லைன் மூலம் ஏலத்தில் பங்கேற்கலாம்.
ஏலம் எடுக்கும் முன்பு, கார் என்ஜின், டையர்களை பரிசோதித்துக் கொள்ளலாம். ஆவணங்களையும் சரிபார்க்கலாம்.
ஏலத்தில் உங்கள் தொகை ஏற்கப்பட்டால் மீதித் தொகையை செலுத்தி வங்கியிலிருந்து கார் ஆவணங்களைப் பெறலாம்.