அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ரூ. 570 கோடி யாருடையது? இதுவரை யாரும் உரிமை கோரவில்லை

திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோராததால், சந்தேகத்துக்கு இடமளிக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:16 pm

PTI

புது தில்லி: திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோராததால், சந்தேகத்துக்கு இடமளிக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரி, கைப்பற்றப்பட்ட பணத்துக்கு யாரும் இதுவரை உரிமை கோராததால், சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என்றார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு வருமான வரித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.

நள்ளிரவு 12.05 மணியளவில் திருப்பூர் அருகே கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் வழியில் உரிய ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்று  செங்கப்பள்ளி அருகே பறிமுதல் செய்தனர்.

கண்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கண்டெய்னர் லாரிகளில் இருந்த பணம் கோவையில் இருந்து விஜயவாடா எஸ்பிஐ வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்திற்கான ஆவணங்களின் நகல்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது திருப்பூர் வடக்கு, அவினாசி செலவினப் பார்வையாளராக உள்ள  குடே ஸ்ரீனிவாஸ் ஐஏஎஸ் தலைமையில்,  விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.