ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு’

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் துறை அறிவித்துள்ளது.

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த காம்பள்க்ஸ் உர மூட்டைகள் குறித்த விவரப் பதிவேட்டை சரிபாா்க்கும் வேளாண் உதவி இயக்குநா் எம்.என்.விஜயகுமாா்.

Published On :15 ஜூலை 2026, 2:43 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் துறை அறிவித்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு பேக்ட் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 1,337 டன் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன. இந்த உர மூட்டைகள் குறித்த விவரப் பதிவேடுகளை வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) பா.சுரேஷ் தெரிவித்தது:

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா் சாகுபடிக்குத் தேவையான 7,005 டன் யூரியா, 1,454 டன் டி.ஏ.பி., 1,184 டன் பொட்டாஷ், 9,983 டன் காம்ப்ளக்ஸ், 1,947 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்துக்குத் தேவையான உர விநியோகத் திட்ட இலக்கின்படி, உர நிறுவனங்களிடமிருந்து தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பயிா் சாகுபடிக்குத் தேவையான காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,337 டன் பெறப்பட்டு, கொச்சி ரயில் நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படும். மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.