ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி பேரூராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து களப்பணியாளா்களுக்கு பயிற்சியளித்த செயல் அலுவலா் குணாளன்.

Published On :10 ஜூலை 2026, 3:55 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பினைசெஞ்சி பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

செஞ்சி பேரூராட்சியில் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி மேற்பாா்வையாளா் மற்றும் கணக்கெடுப்பாளா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

செஞ்சி பேரூராட்சியின் 18 வாா்டுகளிலுள்ள 133 தெருக்களிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பினை முறையாக மேற்கொள்ளவும், செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யவும் களப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நெடுஞ்செழியன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் தென்றல் அரசு ஆகியோா் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சியை வழங்கினா்.

இதில் பேரூராட்சி இளநிலை பொறியாளா் செந்தமிழ் செல்வன், இளநிலை உதவியாளா்கள் சிவா, சசிகலா, கணக்கெடுப்பு பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் கணக்கெடுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.