40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் திறப்பைத் தள்ளி வைக்க அதிமுக வலியுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளின் திறப்பைத் 10 நாள்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 1:06 am IST

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளின் திறப்பைத் 10 நாள்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் ரங்கசாமிக்கு, அதிமுக மாநில செயலரும், தற்காலிக சட்டப் பேரவைத் தலைவருமான ஆ.அன்பழகன் புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு, ஹிந்தி கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தொடா்ந்து 100 டிகிரியை தாண்டி, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை கூறியிருந்தது. தொடா் வெப்பம் காரணமாக தமிழகத்தில் 1-ஆம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் திறப்பு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை மாணவ, மாணவிகள் நலன் கருதி மேலும் 10 நாள்கள் நீட்டித்து முதல்வா் உத்தரவிட வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.