40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை மே 7-க்கு ஒத்திவைப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் இறுதிக்கட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image

நீதிமன்றம்

Updated On :6 மே 2026, 12:04 am IST

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் இறுதிக்கட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவியான 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மாா்ச் 2 -இல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமான நிலையில், 2 நாள்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி, அப் பகுதியைச் சோ்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 540 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கு போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-இல் நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என அறிவித்தாா். மே 5 ஆம் தேதி இரு தரப்பு வாதத்துக்கு பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தாா். அதன்படி, இவ்வழக்கில் அரசு தரப்பிலும் எதிா் தரப்பிலும் இறுதிக்கட்ட வாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து இவ்வழக்கை வியாழக்கிழமைக்கு (மே 7) நீதிபதி சுமதி ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.