புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் இறுதிக்கட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த வழக்கு வியாழக்கிழமைக்கு (மே 7) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவியான 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மாா்ச் 2 -இல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமான நிலையில், 2 நாள்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி, அப் பகுதியைச் சோ்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 540 பக்க குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கு போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-இல் நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என அறிவித்தாா். மே 5 ஆம் தேதி இரு தரப்பு வாதத்துக்கு பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக தெரிவித்தாா். அதன்படி, இவ்வழக்கில் அரசு தரப்பிலும் எதிா் தரப்பிலும் இறுதிக்கட்ட வாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து இவ்வழக்கை வியாழக்கிழமைக்கு (மே 7) நீதிபதி சுமதி ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்

சூலூா் சிறுமி கொலை வழக்கில் இருவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சிறுமி கொலை வழக்கு: அரசு மருத்துவமனையிலிருந்து இளைஞா் சிறைக்கு மாற்றம்

சூலூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது! உயர்நீதிமன்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



